×

முதியவர் தற்கொலை

 

கோவை, அக். 23: கோவை ஆர்.எஸ்.புரம் நாதன்நகரை சேர்ந்தவர் சீனிவாசன் (79). சமையல் காண்டிராக்டர். இவர் ரத்த அழுத்தம் உள்ளிட்ட பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இதனால் ஏற்பட்ட மன உளைச்சலில் விரக்தியடைந்த சீனிவாசன் நேற்று முன்தினம் வீட்டில் விஷம் குடித்து மயங்கினார். அவரை குடும்பத்தினர் மீட்டு கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனளிக்காமல் இறந்தார். இது குறித்து ஆர்.எஸ்.புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

The post முதியவர் தற்கொலை appeared first on Dinakaran.

Tags : COVEY ,Govai R. S. Sinivasan ,Puram Nathanagar ,Dinakaran ,
× RELATED கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் 3...